...மலையின் மீது ஏறி இரா முழுவதும் ஜெபம்... லூக். 6:12
எதற்காக இந்த மலைப்பிரதேசம்? எதற்காக இவ்வளவு பெரிய இடம்? இங்கு என்ன நடை பெறப் போகிறது? என்ற கேள்விகள் எழும்பலாம்!
நானும் இந்தக் கேள்விகளை ஆண்டவருக்கு முன்பாக வைத்து ஜெபித்தேன். தேவனுடைய பாதத்தில் காத்திருந்தபோது ஆண்டவர் தெளிவான ஆலோசனை கொடுத்தார். இந்த மலைப் பிரதேசம் முழுவதும், நம் இந்திய தேசத்திற்காக தேவப் பிள்ளைகள் கூடி ஜெபிப்பதற்காகவே அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது.
முதல் கட்டமாக, கர்த்தருடைய வழி நடத்துதல்படி, இரண்டு மலைகளுக்கு நடுவிலுள்ள உயரமான இடத்தில் ஒரு ஜெபக்கோபுரத்தை ( Prayer Tower) கட்டவிருக்கிறோம்.
இந்த ஜெப கோபுரத்தில் நம் இந்திய தேசத்தின் எழுப்புதலுக்காக, இரட்சிப்பிற்காக இரவும், பகலும் ஜெபங்கள் ஏறெடுக்கப்படும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தைக் குறித்த விபரங்களும், தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களைக் குறித்த விபரங்களும் ஜெபத்திற்காக இங்கு வைக்கப்படும்.
Get details Read More..
Today : 11
Yesterday : 29
This Week : 322
This Month : 394
Total Visitors : 1824